மழை - சில நேரம் சாரலாகவும்,சில நேரம் தூறலாகவும் வந்து இதம் தருவதும், காற்றோடு கலந்து கட்டி ஆக்ரோஷம் காட்டும்போது புயலாக அறியப்படுவதும் அதன் இயல்புகள். அப்படித்தான் இந்த Rainthriller வலைப்பூவும். UPSC, TNPSC, TRB, RRB, IBPS என அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நலன் சார்ந்து அவர்களின் குரலாக ஒலிக்க இருக்கும் சமூக வலைப்பூ இது.
கருமேக கூட்டத்தில் உருவாகி காற்று வெளியில் சற்றே பயணித்து பூமித்தாயின் மடியில் விழும் ஒற்றை மழைத்துளியாய் எனது இந்த முதல் பதிவின்மூலம் தமிழ் இணைய பக்கங்களில் நானும் இணைகிறேன்.