Monday 30 January 2012

TNPSC -யில் குறை தீர்வு மையம்

  TNPSC -யில் குறை தீர்வு மையம்


         தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த மையத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 24ம் தேதி TNPSC தலைவராக பதவியேற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ், TNPSC தலைவர் என்ற முறையில் தனது திட்டங்கள் குறித்து கூறியதாவது, "இந்த மையமானது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும். TNPSC -ல் பலவிதமான பணிகளுக்காக விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான மக்களுடன், TNPSC அதிகாரிகள் தொடர்புகொள்ளும் வகையில் எந்தவிதமான வசதியோ, திட்டமோ அல்லது செயல்முறையோ தற்போது கிடையாது.
TNPSC நடைமுறைகள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு இதன்மீது அதிக நம்பிக்கைப் பிறக்கும். இந்த கமிஷனுக்கு ஆதரவளிப்பவர்களாகவும், அதன் வெற்றிக்கு முதுகெலும்பாகவும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், TNPSC பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும்.
குறைதீர்ப்பு மையம் கூடிய விரைவில் திறக்கப்படுவதோடு, வேறுவிதமான பயன்மிகு முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நான் திட்டமிட்டு வருகிறேன்", என்றார்.

   அதன்படி விண்ணப்பதாரர்களின் குறையைத் தீர்க்க தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் நேரடியாகவோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.  தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக வரும் விண்ணப்பதாரர்களின் மனுக்கள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பெறப்படும். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அன்று மாலை 4 முதல் 5.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படும். தேர்வாணைய அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக கோரப்படும் தகவல்கள் யாவும் தொடர்புடைய பிரிவுகளால் பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தகவல்களை 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொலைபேசி வாயிலாக குறை தீர்ப்பு மையத்தை அணுகி, தேவையான தகவல்களைப் பெறலாம். இதற்காக தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் தொடர்புகொள்ள 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.  contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல்களைக் கோரிப் பெறலாம். மின்னஞ்சல் மூலமாகப் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் தகவல் அனுப்பப்படும். தபால் மூலம் தகவல்களைக் கோர வேண்டிய முகவரி: செயலாளர், குறை தீர்ப்பு மையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 1, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006.  தபால் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் உரிய துறைகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, தகவல்கள் 7 வேலை நாட்களில் அனுப்பப்படும்


VAO பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்

   "வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி அருகே, கீழ்வாணியில் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், கோபி கீழ்வாணி என்ற கிராமத்திற்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், 614 பயனாளிகளுக்கு, 32 லட்சம் மதிப்பிலான விலையில்லாப் பொருட்கள் வழங்கி பேசியதாவது:


வருவாய்த்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகின்றன. வி.ஏ.ஓ., பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. ஒரு கிராமத்தில் பணியமர்த்தப்பட்ட வி.ஏ.ஓ., மூன்று, நான்கு கிராமத்தை கவனித்து வருகின்றனர். இதனால், பணிச்சுமை அதிகரிக்கிறது. சட்டசபை கூட்டம் முடிந்தபின், தமிழக முதல்வர் உத்தரவுடன், துறை அதிகாரிகளை கலந்தாய்வு செய்து, வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

Friday 27 January 2012

TNPSC: தேர்வு முடிவுகள் அறிவிப்பு

திரு.நடராஜ் பதவியேற்ற பின் வந்துள்ள முதல் முடிவு. 
   திரு.ஆர்.நடராஜ், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கடந்த 23 -ஆம் தேதி  பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே முதல் முடிவுகளை வெளியிட்டு அசத்தியுள்ளார்.  அரசு அருங்காட்சியக துறையில்  காப்பாட்சியாளர்(CURATOR), உதவி காப்பாட்சியாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் விடுதி கண்காணிப்பாளர், மற்றும் தடய அறிவியல் துறையில் உதவியாளர் உள்ளிட்ட சின்ன சின்ன தேர்வுகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 27 )  வெளியிடப்பட்டன. இவற்றுள் சில, கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் அடுத்த மாதம்(பிப்ரவரி) நடைபெற உள்ளது. இதன்மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளால் முடங்கிக் கிடந்த தேர்வாணையத்துக்கு திரு.நடராஜ்  உயிர் கொடுத்துள்ளார். தேர்வு முடிவுகளை அறிய  http://www.tnpsc.gov.in/recruitnresults.htm  ஐ காண்க.
    தேர்வாணைய செயல்பாடுகளை எதிர்நோக்கி காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வு முடிவுகளுக்குப் பின் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி ஒவ்வொன்றாக தேர்வு முடிவுகளும், தேர்வு அறிவிப்புகளும் வரும் என்கிற நம்பிக்கையில்  ஆவலோடு காத்திருக்கின்றனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வுகள், பல ஆண்டுகளுக்குப் பின் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகள்:
     இதே நம்பிக்கையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய தேர்வு அறிவிப்புகள்:
1 .GROUP-IV-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு .(Jr .Asst & Typist )
2 .GROUP-VII-ல் அறநிலையத் துறை  செயல் அலுவலர்  பணிகளுக்கான  தேர்வு
3 .GROUP-VIII- அறநிலையத் துறை  செயல் அலுவலர்  பணிக்கான  தேர்வு
4 .GROUP-III-ல் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி   பணிக்கான  தேர்வு
5 .GROUP-I-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு
6 .GROUP-II-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு
7 .DEO (மாவட்ட கல்வி அலுவலர்) தேர்வு
8 .LABOUR OFFICER தேர்வு 
    
வெளியிடத் தயாராகும் தேர்வு முடிவுகள் :
    கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வுகள் முடிந்து, நேர்முகத் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாத கீழ்கண்ட தேர்வுகளுக்கான முடிவுகளையும் விரைந்து வெளியிட தேர்வாணைய தலைவர் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 .FOREST  APPRENDICE  தேர்வு.
2 .LABOUR OFFICER தேர்வு 
3. மாற்றுத் திறனாளிகளுக்கான GROUP-IV தேர்வு .
4 .Asst.Public Prosecutor தேர்வு .
5 .Child Development Project Officer தேர்வு
 
        மேலும் 2011 ஆம் ஆண்டில் நடந்த அதிக புகார்களுக்குள்ளான ஓரிரு தேர்வுகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் மாவட்ட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் VAO தேர்வாளர்களுக்கு மிக விரைவிலும்,  GROUP-II தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் தேர்வாளர்களுக்கு சர்ச்சைக்குரிய 186  ASO பணியிடங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் முடிவுக்குப் பின்னரும் ஆணைகள் வழங்கப்படலாம் என தெரியவருகிறது.
 

Thursday 26 January 2012

சிவில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவில் நீதிபதி தேர்வுக்கு மனிதநேயம் அறக்கட்டளையின் இலவச பயிற்சி


  சென்னை: சைதை சா. துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் சிவில் நீதிபதிகள் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.  இது குறித்த செய்திக் குறிப்பு:  
நீதித்துறையில் தற்போது 185 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தமிழக அரசின் உள்துறையால் நடத்தப்படவுள்ளது. அந்தத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் பி.எல். பட்டதாரிகளுக்கான கட்டணமில்லா பயிற்சியை, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் நடத்த உள்ளது.  இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்துக்கு நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்ய வரும் மாணவர்கள் "பாஸ்போர்ட்' அளவிலான புகைப்படத்தை கொண்டு வர வேண்டும். தொடர்புக்கு: 044-24358373, 9840106162.

Tuesday 24 January 2012

TNPSC CHAIRMAN - சிறப்பு பேட்டி

தேர்வாணையத்தில் தவறு நிகழ விடமாட்டேன்: ஆர்.நடராஜ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நடராஜ். உடன், தேர்வாணையத்தின் செயலாளர்.
       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இனி எந்தத் தவறும் நிகழ விட மாட்டேன் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அதன் தலைவரும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நடராஜ் தெரிவித்தார்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக திங்கள்கிழமை காலை அவர் பொறுப்பேற்றார். இதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  
            தமிழக அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்தப் பணியை அளித்துள்ளது. அரசுப் பணி என்பது தெய்விகப் பணியாகும். அது ஒரு கொடை. அத்தகைய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அதை திறமையாகப் பயன்படுத்துவேன்.  அரசுப் பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாகச் செயல்படுவது அவசியம். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசுப் பணியில் சேரும் சூழ்நிலையை உருவாக்குவேன்.  நாணயம் பெறாத சேவை: முதலில் செய்யப் போவது நாணயம் பெறாத நாணயமான சேவை. தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து இருக்கிறது. அந்தப் புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.  
கேமரா மூலம் கண்காணிப்பு: ஒவ்வொரு தேர்வு அல்லது முதல் நிலைத் தேர்வு முடிந்தவுடன், அந்தத் தேர்வுக்கு உரிய விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் குறித்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் கருத்துகள் கேட்கப்படும். தேர்வர்களால் ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அந்த விடைகள் நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அந்தக் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைகள் ஏழு நாள்களுக்குள் வெளியிடப்படும்.  10-ம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளைப் போன்று, விண்ணப்பதாரர்கள் தங்களது திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர். தேர்வு நடைபெறும் அறைகளிலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும். நேர்முகத் தேர்வின்போது சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் விடியோ காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.  
பாடத்திட்டம்-தேர்வு தேதி: 
அனைத்துத் தேர்வுகளுக்கும் உரிய தேர்வுமுறை, பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள பல்வேறு தேர்வுகள், அந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள உத்தேச தேதியையும் உள்ளடக்கிய தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.  அரசுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். பணிக்கு வருபவர்களின் பகுத்தறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.  
15 நாட்களில் புதுப்பிப்பு: 
 தேர்வாணையத்தின் இணையதளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல்வேறு தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாட முறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.  தவறு நிகழாது: லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவோம். நல்ல முறையில் படித்து நேர்மையாகத் தேர்வு எழுதினால் அரசுப் பணயில் சேர வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவோம். தேர்வாணையத்தில் எந்தத் தவறும் நிகழ விட மாட்டேன் என்றார் நடராஜ். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் உடனிருந்தார்.    
தேர்வு முடிவுகள் எப்போது? 
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.நடராஜ் பதிலளித்துள்ளார்.  அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர், குரூப் 2 தேர்வுகள் முக்கியமானதாகும். இரண்டு தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியான நிலையில், குரூப் 2 வெற்றியாளர்களுக்குப் பணி நியமன உத்தரவும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு மாவட்ட அளவில் பணி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.  இந்தப் பணிகள் அனைத்தும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த உத்தரவை டி.என்.பி.எஸ்.சி.க்கு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அனுப்பியுள்ளது. ஆனால், பணி நியமன உத்தரவை ஆறு வார காலத்துக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வாணையத் தலைவர் நடராஜிடம் கேட்டபோது, ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் குறித்தும், இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பற்றியும் சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அது குறித்து தமிழக அரசுடன் விவாதித்த பிறகே பணி நியமன உத்தரவுகள் வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
 தனி குறியீடு...  
தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளை எழுதுவோருக்கு குறியீடு வழங்கப்படும் என தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியது: தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் தேர்வர்களின் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது. எனவே, அவர்கள் ஒரு முறை விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கென தனி குறியீடு வழங்கப்படும். அடுத்த முறை வேறொரு பதவிக்கு நடைபெறும் தேர்வை எழுத அந்தக் குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று நடராஜ் தெரிவித்தார்.   

* டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் மற்றும் இப்போதைய உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒத்துழைப்பு இனி எந்த வகையில் இருக்கும்? எனக் கேட்டதற்கு ..
அவர்கள் கேட்டால், நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்போம்.

* தேர்வாணையத்தில், தற்காலிக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். பல முறைகேடுகளுக்கு அவர்களும் உடந்தை என கூறப்படுகிறது.                                                                                                                   
அவர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவரா? 
பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அவைகளை எல்லாம் கையாள வேண்டுமெனில், கூடுதலாக பணியாளர்கள் தேவை. அதனால், தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்படும் என்று கூறினார்.

Monday 23 January 2012

TNPSC CHAIRMAN பொறுப்பேற்றார்.

தேர்வுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என அறிவிப்பு.
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஆர்.நடராஜ். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்வாணைய தேர்வு முறையில் வெளிப்படையான  அணுகுமுறை பின்பற்றப்படும்.

தேர்வு விடைத்தாள் கோரி விண்ணப்பித்தால் திருத்தப்பட்ட விடைத்தாள் வழங்கப்படும். தேர்வுகளுக்கான திட்டமிட்ட கால அட்டவணை முறைப்படி பின்பற்றப்படும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஒரு முறை விண்ணப்பித்தால் போதும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே புதிய விண்ணப்பம் வழங்க தேவையில்லை. தேர்வுகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்," என்றார் ஆர்.நடராஜ்.

தமிழக அரசு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை:
   
         இதனிடையே டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதன் உறுப்பினர்கள் லெட்சுமணன், பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த தடை விதித்ததுடன், உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தனர். இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.


TNPSC வழக்குகள் ஒத்திவைப்பு:
       டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணை மூன்று வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

Saturday 21 January 2012

CIVIL JUDGE தேர்வு அறிவிப்பு.

  தமிழ்நாடு முழுவதும் காலியாக  உள்ள 185 உரிமையியல் நீதிபதிகள் பணியிடங்களில் தகுதியானவர்களை நிய  மிப்பதற்கான எழுத்துத் தேர்வு மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில்நடைபெறு  கிறது.  சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற இளம் பட்டதாரிகளும், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களாக பணியாற்றுவோரும் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை www.tn.gov.in/departments/home.html  என்ற இணையதள முகவரியில் அறியலாம். அந்த விவரங்கள் வருமாறு.
GOVERNMENT OF TAMIL NADU
Home Department
Secretariat, Chennai-600 009
NOTIFICATION CALLING FOR APPLICATIONS FOR THE POST OF CIVIL JUDGE
1. Applications are invited by the Government of Tamil Nadu for
appointment of 185 posts of Civil Judge in the Tamil Nadu State Judicial
Service to be made by direct recruitment.
2. The distribution of the above said 185 vacancies is as follows :-
Sl.No.Category Posts Reserved
1. General Turn 56
2. Scheduled Castes 29
3. Scheduled Castes (Arunthathiyars on preferential basis) 6
4. Scheduled Tribes 2
5. Backward Classes (other than Backward Class Muslims) 49
6. Most Backward Classes and Denotified Communities 37
7. Backward Class Muslims 6
Total No. of Vacancies 185

i)The reservation in recruitment in respect of differently abled persons is
governed by the orders issued in G.O. Ms. No.87, SW & NMP (SW-4) Department,
dated 17.7.2008.
ii)The reservation for women shall be as per the rules.

3. QUALIFICATIONS
(A) AGE (As on 01.07.2012) :
(i) For Practising Advocates / Pleaders and Assistant Public Prosecutors -
Minimum Age Limit : 25 Years
Maximum Age Limit : 35 years (For General Category)
: 40 years (For Reserved Categories)
:: 2 ::
(ii) For Fresh Law Graduates ( For all Categories) -
Minimum Age Limit : 22 Years
Maximum Age Limit : 27 Years
(B) EDUCATIONAL QUALIFICATION :
Candidates should possess the following or its equivalent qualification on the
date of this Notification.
I. For Practising Advocates / Pleaders and Assistant Public Prosecutors:-
(i) Must possess a degree in Law of a University in India established or
incorporated by or under a Central Act or a State Act or an Institution
recognised by the University Grants Commission or any other equivalent
qualification and got enrolled in the Bar Council of Tamil Nadu, and in the case
of candidates enrolled in the Bar Councils of other States, they should submit a
proof of transfer of their enrolment to the Bar Council of Tamil Nadu;
and
(ii)(a) Must be practising as an Advocate or Pleader in the High Court or Courts
Subordinate thereto and must have so practised for not less than 3 years on the
date of this Notification.
or
(b) Must be an Assistant Public Prosecutor having not less than 3 years of
experience as an Advocate and / or Assistant Public Prosecutor.
Note :
i) In the case of advocates practising in subordinate courts, the certificate in
proof of their practice should be obtained from the Presiding Officer of the
Court in which the candidate is/has been practising.
ii) The Assistant Public Prosecutors shall produce the certificate issued by the
Director/Deputy Director of Prosecution or the Presiding Officer of the court in
which he is practising.
iii)In the case of candidates practising in the High Court, such certificate
should be obtained from the Registrar (Judicial) at the Principal Seat and the
Madurai Bench, as the case may be.
The Certificate should be in the following format :
"Certified that Thiru./Tmt./Selvi........................................ is
practicing as Advocate in this Court for ............ years.
Date: . .2012 Signature of the Presiding Officer
with seal.”
:: 3 ::
II. For Fresh Law Graduates :
(i) Must be a fresh Law Graduate possessing a Degree in Law from a recognized
University as mentioned in Clause-I (i) above;
(ii) Must be eligible to be enrolled or enrolled as an advocate;
(iii) Must have secured an overall percentage of
(a) 50% Marks in case of open categories;
(b) 45% Marks in case of all reserved categories.
(iv) Must have obtained the Degree of Law within a period of three years prior to
the Date of this Notification.
4. SCHEDULE
Date Time
(A) Date of Notification 21.01.2012 -
(B) Last date of receipt of applications 20.02.2012 5.45 P.M.
(C) Date of Written Examination
1. Translation Paper
2. Law Paper – I
3. Law Paper – II
4. Law Paper – III
24.03.2012
24.03.2012
25.03.2012
25.03.2012
10.00 A.M. to 1.00 P.M.
2.00 P.M. to 5.00 P.M.
10.00 A.M. to 1.00 P.M.
2.00 P.M. to 5.00 P.M.
5. SCHEME OF WRITTEN EXAMINATION (DESCRIPTIVE TYPE) AND VIVA-VOCE
Subject
WRITTEN
(Descriptive Type)
Duration Maximum
Marks
Minimum Marks for a pass in each Paper
SC & ST MBC/DC, BC Others
1. Translation Paper 3 hours 100 30% 35% 40%
2. Law Paper - I 3 hours 100 30% 35% 40%
3. Law Paper – II 3 hours 100 30% 35% 40%
4. Law Paper - III 3 hours 100 30% 35% 40%
VIVA-VOCE 60 18 (for all categories of candidates)
Note :
(i) Candidates, who have secured less than the minimum marks specified above in
any paper of the Written Examination are not eligible for Viva-voce.
Candidates who have secured less than the minimum marks prescribed for
Viva-voce are not eligible for selection.
:: 4 ::
(ii) The appearance in all the papers at the Written Examinations and for the Vivavoce
is compulsory.
(iii) The question papers on Law Papers I, II and III will be set both in English and in
Tamil. The candidates are given the option of answering the papers either in
English or in Tamil.
(iv) SYLLABUS FOR THE WRITTEN EXAMINATION :
a) Translation Paper
There will be one translation paper and the candidates will be required to
translate passages in English into Tamil and Tamil into English. The passages
will be from (1) Depositions, (2) Judgements, and (3) Documents.
b) Law Paper – I
The Code of Civil Procedure, 1908; The Code of Criminal Procedure, 1973; The
Indian Evidence Act, 1872; The Principles of Pleading and The Constitution of
India.
c) Law Paper – II
Framing of issues and writing of Judgments in civil cases;
Framing of charges and writing of Judgements in criminal cases.
d) Law Paper – III
Alternate Dispute Resolution Mechanism & Techniques;
Legal Services Authority Act;
Plea Bargaining.
(v) Viva-voce
In the Viva-voce, the candidate’s general knowledge, knowledge of law, grasp
of procedural laws & principles of law and his/her overall aptitude for
selection to the post will be tested.
6. SCALE OF PAY
Rs.27700 - 770 - 33090 - 920 - 40450 - 1080 - 44770 per mensem.
7. GENERAL INFORMATION
(A) The rule of reservation relating to appointments applies to the posts.
(B) The number of vacancies advertised is only approximate and is subject to
modification with reference to the vacancy position at any time before
finalisation of selection for Oral Test or selection for appointment, as the case
may be.
:: 5 ::
(C) If no qualified and suitable women candidates are available for selection
against the vacancies reserved for them, those vacancies will be filled up by
male candidates belonging to the respective communal categories.
(D) CERTIFICATE OF PHYSICAL FITNESS :
Candidates selected for appointment to the post will be required to produce a
certificate of physical fitness in the form prescribed for “Posts other than
Executive and Ministerial”.
The Standard of vision required of the candidates selected for the post is
‘Standard-III’ or better. Standard –III is as follows :
Better eye Worse eye
Distant vision without glasses
Distant vision with glasses
6/6
6/6
OR
6/9
6/12
Candidates with defective vision should produce Eye Fitness Certificate from a
qualified eye specialist.
(E) (i) Persons with disability are required to produce, along with the application
form, a certificate of physical fitness from a Registered Medical Practitioner
not below the rank of Assistant Civil Surgeon to the effect that his/her
disability will not render him/her incapable of efficiently discharging the
duties attached to the post.
(ii) The High Court reserves the right to refer any such candidate so selected to
the Medical Board for certifying their fitness or otherwise to the said post.
(F) In G.O.Ms.No.241, P&AR (K) Department, dated 29.10.2007, the Government
have issued orders reserving 3.5 % to BC Muslims within the 30%
reservation available for BCs. All the concessions / relaxations available to BC
candidates are applicable to BC Muslim candidates also.
Note:
The expression B.C. (i.e. Backward Class) wherever it occurs should be read as
B.C. (Other than BCM) and B.C.(Muslim).
:: 6 ::
8. CENTRES FOR WRITTEN EXAMINATION
Sl. No. Name of the Centre
1 Chennai
2 Coimbatore
3 Madurai
4 Salem
5 Thanjavur
6 Tiruchirappalli
7 Tirunelveli
8 Vellore
9 Villupuram
Note:
i) Candidates would be preferably allotted the Centre of Examination on the
basis of their residence/place of practice as stated in their application.
ii) The High Court reserves the right to increase or decrease the number of
examination centres and allot/re-allot the candidates to such centres.
9. PROCEDURE OF SELECTION
The selection will be made in two successive stages i.e., (i) Written
Examination and (ii) Viva-Voce. The final selection will be made on the basis of the
total marks obtained by the candidates at the Written Examination and Viva-Voce
taken together subject to the rule of reservation of appointments. Candidates’
appearance both in the Written Examination and Viva-Voce and securing the
minimum qualifying marks prescribed for both is compulsory for the selection.
10. EXAMINATION FEE
Rs.200/- (Rupees Two Hundred Only) - Non refundable
The examination fee should be paid in the form of a Demand Draft drawn in
favour of the Registrar General, High Court of Madras, payable at Chennai, on or
after the date of this Notification and the same should be enclosed along with the
application. Candidates belonging to the SC/ST community are exempted from
payment of the examination fee.
:: 7 ::
11. ENCLOSURES TO BE SENT ALONG WITH APPLICATION
A. All candidates applying for the post are required to send with the application
form, self-attested xerox copies of the following testimonials (Originals to be
produced at the time of Viva-voce) :
(i) Certificate showing the proof of Date of Birth
(ii) S.S.L.C. / H.S.C. Certificates
(iii) Degree Certificates (Basic Degree / Law Degree)
(including certificate in proof of qualification in Tamil language)
(iv) Community Certificate (in case of Reserved Categories) issued by the
competent authority
(v) Disability Certificate (wherever applicable) issued by the competent
authority
(vi) Three copies of the latest passport size photographs
B. For practising Advocates /Pleaders / Assistant Public Prosecutors :
In addition to certificates mentioned in (A),
(i) Enrolment Certificate from the Bar Council of Tamil Nadu.
or
Proof of transfer of enrolment to the Bar Council of Tamil Nadu
(Applicable only to candidates enrolled in the Bar Councils of other
States)
(ii) Certificate in the format mentioned above to show that he/she has
been practising as an Advocate or Pleader in the High Court or Courts
Subordinate thereto and that he/she has so practised for not less than 3
years on the date of this Notification.
or
Certificate in such format to show that he/she is an Assistant Public
Prosecutor having not less than 3 years of Experience as an Advocate and/or
APP on the date of this Notification.
C. For Fresh Law Graduates :
In addition to certificates mentioned in (A),
(i) Bar Council Enrolment certificate or a certificate issued by the Bar
Council of Tamil Nadu to the effect that he/she is eligible to be enrolled
as an Advocate.
:: 8 ::
(ii) Consolidated Statement of Marks or Statement of Marks for all
Semesters.
(iii) In the case of Open Categories, evidence to show that he/she has
secured an overall percentage of 50% marks in acquiring the Law Degree
and in case of other reserved categories 45% marks.
12. EMPLOYMENT CERTIFICATE
Candidates who are working as Assistant Public Prosecutors are required to
produce a certificate to that effect issued by the Government.
13. CONCESSION
Rule 53 of the General Rules for the Tamil Nadu State and Subordinate Services
shall not apply for this recruitment.
14. ISSUE OF APPLICATION FORMS
Candidates should apply only in the prescribed format which is given
hereunder, in A-4 size sheet, which is also available on the website
"http://www.tn.gov.in/departments/home.html" and any deviation therefrom
will result in summary rejection of the application.
15. RECEIPT OF APPLICATIONS
The filled-in applications along with Demand Draft towards Examination Fee
(other than exempted candidates) and all the enclosures mentioned
hereinabove should reach the office of the Principal Secretary to Government,
Home Department, Fort St. George, Chennai-600 009 by 5.45 p.m. on or
before 20.02.2012.
Incomplete applications and applications without Demand Draft (for
applicable candidates) and without the prescribed enclosures would be
summarily rejected and no communication will be issued and no further
correspondence in this regard will be entertained.
:: 9 ::
16. TRAINING, EMOLUMENTS, ETC.
The persons selected to the post shall undergo training for a period of twelve
months and shall, within the period of probation, pass the Account Test for
Executive Officers. During the training period, they shall be entitled to the
minimum time scale of pay and annual increment applicable to the said post.
If they pass the Account Test for Executive Officers before the completion of
one year of service, they shall be eligible to draw the first increment in
advance from the date, following the date of passing such examination.
Note: Canvassing in any form will result in disqualification of the candidate.
Secretariat, Chennai-600 009. Principal Secretary to Government,
Dated : 21.01.2012 Home Department
THE PRESCRIBED FORMAT OF THE APPLIC A T I ON FORM IS GIVEN BELOW
APPLICATION FOR THE POST OF CIVIL JUDGE

1.Name of the Candidate (in BLOCK LETTERS) :
2.Father's / Husband's Name :
3.Date of Birth and Age as on 01.07.2012 :
4.Gender :
5. Nationality & Religion :
6. Permanent address :
7. Address for Communication :
8. Academic Qualification :
9. Examination(s) passed in Tamil Medium
or English Medium :
10.Date of Enrolment as an Advocate :
11.Number of years of standing at the Bar :
(The period of suspension of the Bar
if any, should be stated)
12.Community [SC/ST/ MBC and DC/ BC :
(other than BC Muslims) / BC Muslims /
Others] with name of the Caste
Affix passpost
size photograph
with signature
13.Mother Tongue :
14.Native Place / District :
15.Place of Practice :
16.Whether the applicant is involved/convicted :
in any case
17.Whether the applicant has come to the :
adverse notice of the Bar Council/Police
18.Whether the applicant has been debarred/ :
rusticated by any University
19. Do you claim reservation under the :
Physical Disability category
If yes, specify category (Blind/Deaf/Ortho) :
Whether "Scribe" is required :
20. Details of Examination fee paid :
[D.D. No., Date, Name of Bank & Branch]
21. Particulars of previous/present employment :
(if any)
DECLARATION
I, , do hereby declare that all the facts and
information stated above are true to the best of my knowledge and belief and I signed this
on the th day of 2012.
Place:
Date:                                                                 Signature of the applicant
Enclosures:-
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
                                                                        Signature of the applicant

Friday 20 January 2012

TNPSC :புதிய தலைவர் ஆர்.நட்ராஜ்

நட்ராஜ்-ராஜநடை


  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் புகாரைத் தொடர்ந்து அதன் தலைவர் பொறுப்பில் இருந்து செல்லமுத்து விலகினார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி இவர். இந்திய அரசியல் சட்டம் 316(1)-ன் படி, தமிழக ஆளுநர் இவரை பதவியில் நியமித்துள்ளதாகவும், ஆர்.நட்ராஜ் 62 வயது நிறைவுறும் வரை பதவியில் இருக்கலாம் என்றும் ஆளுநர் உத்தரவை சுட்டிக்காட்டி அரசின் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

     தலைவர் பதவிக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது இது முதல் முறை. இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி வரை உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த அவர், இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளங்கலை படிப்பை தனது சொந்த மாவட்டத்தில் படித்தாலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார்.  1975-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஸ்.பி.யாக தனது போலீஸ் பணியைத் தொடங்கினார். தென் மாவட்டங்களை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியைப் பிடிப்பதிலும், காட்டுக் கொள்ளையன் வீரப்பனைத் தேடும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.  வீரப்பனைத் தேடி சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் கூடுதல் டிஜிபியாக நடராஜ் பணியாற்றினார். இதன் பின், சென்னை மாநகர போலீஸ் ஆணையராக கடந்த 2003 முதல் 2006 வரை பணியாற்றினார். மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். தனது சிறப்பான போலீஸ் பணிக்காக 1993-ல் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் நடராஜுக்கு வழங்கப்பட்டது.   தினமணி பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருபவர். சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பணியில் நேர்மையாளராக அறியப்படுபவர்.. 


நம்பிக்கை நட்சத்திரங்கள் : TNPSC புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள திரு.நடராஜ், TNPSC செயலராக உள்ள திரு.உதயச்சந்திரன், மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளரான திரு.இறையன்பு ஆகியோரிடம் நிறைய எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் இவர்கள் தத்தமது நேர்மையான செயல்பாடுகளின் மூலம் நமது இளைஞர்களின் வாழ்வில் விடியலைத் தருவார்கள் என்று நம்புவோம்.
                                  
                 
டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவர் நட்ராஜ், "பயோ-டேட்டா'

பெயர்                                     : ஆர்.நட்ராஜ்
தந்தை                                    : ராமச்சந்திரன் (புனைப்பெயர் உமா சந்திரன், பிரபல எழுத்தாளர்.)
தாயார்                                  : கமலம்மாள்
சொந்த ஊர்                        : முன்னீர்பள்ளம், நெல்லை மாவட்டம்.
வயது                                    : 60
கல்வி                          :பள்ளிப்படிப்பு,  சென்னை திருவல்லிக்கேணியில்                    உள்ள     இந்துமேல்நிலைப்பள்ளி. விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி.,
பின், மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.சி.,பிசிக்ஸ் பட்டம் பெற்றார். அதன்பின், சட்டப்படிப்பு மற்றும் எம்.ஏ., பொது நிர்வாகம் பட்டமும் பெற்றவர்.
மனைவி                             : நிர்மலா
பிள்ளைகள்                  : இரு மகன்கள். நிகிலேஷ், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர். மற்றொரு மகன் நித்திலேஷ், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக தொழில் செய்கிறார்.
 
கூடுதல் தகவல்கள்:
நட்ராஜ் குறித்து கூடுதல் தகவல்கள்: "அவர் அலுவலகத்திற்கு யார் போனாலும், அன்பாக வரவேற்பார். காபி, டீ கொடுப்பார். கல கலப்பாக, பல விஷயங்களையும் பேசுவார். ஆனால், இனிக்கப் பேசியோ, அவரைப் புகழ்ந்து பேசியோ, அவரை வைத்து ஏதாவது, காரியம் சாதிக்கலாம் என நினைத்தால் அது தவறு. ஏனெனில், எதைக் கேட்டாலும், மனிதர் விதிமுறைகளை மேற்கோள் காட்டி மறுத்துவிடுவார்''. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,"நட்ராஜ், சரியான சாய்ஸ்!' மிகச்சிறந்த ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இனிமேல், டி.என்.பி.எஸ்.சி., அமைப்பில் சிறிய கீறல் கூட நடக்காது. அந்தளவிற்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கும்,'' என்றார். 

Wednesday 18 January 2012

தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான் : உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

           தமிழர்களிடம் இப்போது இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலர் த. உதயச்சந்திரன்  ஐ.ஏ.எஸ். கூறினார்.  

       சென்னை புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியது:  புத்தகக் காட்சியில் எவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகிறது என்பதை அதன் விற்பனை மதிப்பை வைத்து எடைபோடக்கூடாது. எவ்வளவு தரமான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்பதை பார்த்துதான் கணிக்க வேண்டும்.  ஒரு தாய் தனது குழந்தைக்கு தரமான, நல்ல உணவை எப்படி பார்த்துப் பார்த்து கொடுக்கிறாளோ, அதுபோல ஒரு பதிப்பகம் வாசகர்களுக்கு தரமான புத்தகங்களை வழங்க வேண்டும்.  தமிழ், தமிழர், தமிழகம் கடல் கடந்து மட்டும் தாக்கப்படவில்லை. இயற்கைச் சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான். பழமையான பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை புத்தகத்தில் பதிவு செய்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச்செல்ல முடியும்.  தமிழகத்தில் நடந்த களப்பிரர் ஆட்சிக் கால வரலாறு, வலங்கை சாதி, இடங்கை சாதி, வடக்கில் இருந்து வந்த மொகலாய மன்னர்கள் பற்றிய வரலாறு ஆகியன இதுவரை முறையாக பதிவு செய்யப்படவில்லை. நிகழ்காலத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.  தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியது ராஜராஜ சோழன்தான் என்பதை வெளிப்படுத்தியதுகூட ஓர் ஆங்கிலேயர்தான். மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து ஆங்கிலேயர் ஒருவர்தான் ஆய்வு செய்து இந்தத் தகவலைப் பதிவு செய்தார்.  வரலாற்றுச் சம்பவங்களை ஆவணமாக பதிவு செய்யும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் தகவல்கள் குறித்த புத்தகங்களை பதிப்பாளர்கள் வெளியிட வேண்டும். உலகில் பல தலைவர்களுக்கு மாற்றுச் சிந்தனை, புரட்சிகரமான சிந்தனைகளை வழங்கியது புத்தகங்கள்தான். எனக்குக்கூட தைரியம் கொடுத்தது புத்தகம்தான் என்றார் உதயச்சந்திரன்.

Monday 16 January 2012

TNPSC ஊழல் :தேர்வுகள் ரத்தாகுமா ?

TNPSC ஊழல் :தேர்வுகள் ரத்தாகுமா ? 
   எப்போதும்  இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல் மலிந்து, அதன் தொடர்ச்சியாக இதுவரை நான்கு கட்ட ரெய்டுகள் நடந்துள்ளன. ரெய்டுகளில் கிடைத்த ஆதாரங்கள் பற்றி கண்காணிப்புத்துறை ரகசியம் காக்கிறது. அவற்றை அவர்கள் நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிப்பார்கள். அப்போதுதான் ஊழலின் ஒட்டுமொத்த பரிமாணமும் தெரியவரும். அதுமட்டுமல்லாமல் முறைகேடு  செய்தவர்கள், முறைகேட்டுக்கு  துணை நின்றவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படலாம். இதற்கிடையில் குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் வெளியான தகவல் போட்டித் தேர்வாளர்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 தேர்வுகள் ரத்தாகுமா ?
         2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்கள், VAO தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்கள், கால்நடை  மருத்துவர்களின்  வீடுகள் மட்டுமல்லாது சமீபத்திய குரூப் -1 மற்றும் குரூப் -2  தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள்ளதால், அங்கெல்லாம் கிடைக்கப்பெற்ற சான்றாவணங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களுமே   தேர்வுகள் ரத்தாகுமா?  என்ற கேள்விக்கு விடையை தர வல்லன.  இருப்பினும் முறைகேடாக பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்து , அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவிட்டால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு  கைது நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படலாம். அப்போது தேர்வுகள் ரத்து செய்யப்படும் நிலை எழாது. ஒரு வேளை  முறைகேடாக பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை அறுதியிட்டு கூற முடியாத அளவுக்கு பெருமளவில் இருந்து அவர்களில் சிலர் சிக்கியும் சிலர் சிக்காமலும் உள்ள நிலை வருமானால், அந்நிலையில் அரசு ஏற்கனவே நடந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மறு தேர்வுக்கு உத்தரவிடலாம் என்பதே தற்போதுள்ள நிலை. என்ன நடந்தாலும் அது விரைவில் நடந்து தேர்வாணையம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
      

Sunday 15 January 2012

அறுவடைக்காலம்......



                                                         அறுவடைக்காலம்......

விதை  விதைத்தவன்
காத்திருந்தான்..
போட்ட விதை
திருடப்பட்டதே
தெரியாமல் ..

ஜீவ ராசிகள்
தின்றிருந்தால் கூட
பரவாயில்லை.  

திருடப்பட்டதைத்தான்
அவனால்
ஜீரணிக்க முடியவில்லை .

ஆனாலும்
அசரவில்லை அவன்                                     
விதை நேர்த்தி தொடர்கிறது.


அவனுக்கு தெரியும்
இது.. வசந்த காலத்தின்
தொடக்கம்.

வினை விதைத்தவன்...
காத்திருக்கிறான்
புழலா? வேலூரா?
என தெரியாமல்..

கைப்பொருளை
களவாடினால்தான்
தண்டனையா?

இங்கே கனவுகளை
களவாடினாலும்
தண்டனைதான் .

இவனுக்கும் தெரியும்
இது இலையுதிர்காலத்தின்
தொடக்கம் . 

மொத்தத்தில்
இது அறுவடைக்காலம்..
வினை விதைத்தவனுக்கு

(புதிய)
அறிவிப்புகளுக்காக
காத்திருக்கும்
அனைவருக்கும்
அறுவடைத் திருநாள்
நல்வாழ்த்துகள் ....
                                                                                             -  Rainthriller

Saturday 14 January 2012

TNPSC ஊழல்: கைதாகும் அதிகாரிகள்

  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு தண்டனை .
டி.என்.பி.எஸ்.சி. ஊழல்: 53 அதிகாரிகள் கைது ஆவார்களா?-  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு தணட்னை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மனாக இருந்த செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி செல்லமுத்து மற்றும் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தேர்வாணைய ஊழல் தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் சிக்கின. 2-வது கட்டமாக நவம்பர் 18-ந்தேதி தேர்வாணைய அதிகாரிகள் 13 பேரின் வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. பின்னர் இடைத்தரகர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் டிசம்பர் 13-ந்தேதி சோதனை நடைபெற்றது.

இந்த 3 கட்ட சோதனை களிலும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். முறைகேடான வழியில் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து அரசு பதவிகளில் சேர்ந்தவர்கள் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். கால்நடை டாக்டர்கள், உதவி செக்சன் அதிகாரி (ஏ.எஸ்.ஓ.) ஆகிய பதவிகளை நியமனம் செய்வதில் அதிக அளவில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது.

இதுபோன்று முறைகேடாக அதிகாரிகள் அந்தஸ்தில் இருக்கும் 53 பேரின் பட்டியல் தயாரானது. இவர்களது வீடுகளில் 4-வது கட்டமாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இச்சோதனை இரவு வரை நீடித்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 76 இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின்படி, லஞ்சம் வாங்குவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். இதன் அடிப்படையில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை தயார் செய்து விட்டுத்தான் தேர்வுக்கு தயாராகியுள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையின்போது யார் -யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்தோம் என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டம் 12-வது பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முறைகேடாக பணியில் சேர்வதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த குறுக்கு வழி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவாக அறிக்கை தயாரித்துள்ளனர். எனவே லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக 58 அதிகாரிகளும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டு இவர்கள் கைதாகி 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

நேர்மையாக படித்து அரசு பணிக்காக எண்ணற்ற இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தேர்வாணையமே முறைகேட்டில் ஈடுபட்டது இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வாணைய தலைவர் செல்லமுத்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிதாக நியமிக்கப்படுபவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் அப்போதுதான் இது போன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகள்

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகள் பதவி பறிபோகுமா?
லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த அதிகாரிகள் பதவி பறிபோகுமா?

       அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக தமிழ் நாடு முழுவதும் 73 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.   சோதனைக்குள்ளான 53 பேர் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தமிழக அரசில் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகள் அந்தஸ்தில் பணிபுரிகிறார்கள். கால்நடை டாக்டர்கள், பல் டாக்டர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் 2006-ல் இருந்து 2008 வரையில்  பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்-1 பதவிகளான சப்-கலெக்டர், டி.எஸ்.பி., அரசு துறை பதிவாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.   குரூப்-2 பதவிகளும் நிரப்பப்பட்டன.
இந்த இரண்டிலும்தான் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக குரூப்-1 பணியிடங்களுக்குத்தான் அதிக அளவில் போட்டி இருந்தது. இதற்காக பலர் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுத்து அரசு பணியில் சேர தயாராக இருந்தனர்.
இதனை தேர்வாணைய தலைவர், உறுப்பினர்களும், அதிகாரிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர்.   தேர்வாணைய தலைவர்-உறுப்பினர்கள் வீடுகளில் நடந்த சோதனையின் போது அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தது.
ரூ.1 1/2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு பணியில் பலர் சேர்ந்துள்ளதை கண்டுபிடித்தோம். எங்களது விசாரணையில் 53 பேர் லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளாக பணியில் அமர்ந்துள்ளது தெரிய வந்தது. 10-க்கும் மேற்பட்டவர்கள் அரசு தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களது வீடுகளில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மதுரை மற்றும் சென்னையில் முறைகேடாக பணி நியமனம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.  
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும். லஞ்சம் வாங்குவோருக்கு என்ன தண்டனையோ, அதே அளவு தண்டனை தான் லஞ்சம் கொடுப்பவருக்கும் கிடைக்கும். இரண்டும் சமமான குற்றமாக கருதப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் இதுவரை லஞ்சம் வாங்கியவர்கள், லஞ்சம் வாங்கி கொடுத்தவர்களின் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இப்போது முதல் முறையாக லஞ்சம் கொடுத்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் பட்டியல் லஞ்சம் ஒழிப்பு போலீஸ் வசம் உள்ளது. எனவே இவர்கள் பதவியில் நீடிக்க முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டால் இவர்களது பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.
லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய கால்நடை டாக்டர்கள்  
தமிழ்நாடு முழுவதும் தேர்வாணைய ஊழல் தொடர்பாக கால்நடை டாக்டர்கள், தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டத்தில் பாரதிபுரம் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் தொப்பூரைச் சேர்ந்தவர் கஜேந்திரவேலு. இவர் ஓமலூரில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா.

இவர் தர்மபுரியில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை இவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி செந்தில் நகர் செல்வகணபதி தெருவில் உள்ள கால்நடை டாக்டர் பத்மா வீட்டிலும் லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பாப்பாரப்பட்டியில் உள்ள ஒருவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.   சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி, இளம்பிள்ளை மற்றும் அம்மா பேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டி காலணி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பகுதியிலும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி பணிபுரிபவர்கள் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டையை அடுத்த நஞ்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் டி.என.பி.எஸ்.சி தேர்வு எழுதி இருந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் ராஜ்குமார் வந்தால் சேலம் லஞ்ச ஒழிப்பு பரிரிவு போலீசுக்கு நேரில் வருமாறு அவரது உறவினர்களிடம் கூறி விட்டு சென்று விட்டனர்.

அரசு கருவூலத்தில் வேலை பார்க்கும் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தியாராஜன் வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதே போல சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை ரேவதி வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.  

திருச்சியில் உறையூர் பாண்டமங்கலத்தில் சம்பத் என்பவர் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். முசிறி அருகே கோட்டத்தூரில் லோகநாதன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அரியலூரில் தியாகராஜன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது.  

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் அருளானந்தம் என்பவர் குரூப் 2 தேர்வில் தேர்வாகியுள்ளார். லஞ்ச ஒழிப்பு டி. எஸ்.பி. சியாமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருளானந்தம் வீட்டிற்கு இன்று சென்று சோதனையிட்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் கண்ணன் என்பவர் குரூப்-2 தேர்வில் தேர்வாகியுள்ளார். அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

 சிவகங்கையில் 2 இடங்களிலும், காளையார் கோவிலில் ஒரு இடத்திலும், மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் ஒரு வீட்டிலும் சோதனை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் வருவாய்த்துறை ஆய்வாளராக உள்ளார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணம் கொடுத்து வேலையில் சேர்ந்ததாக தெரிகிறது. இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பூவலிங்கம் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு சூளை பகுதியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் 5 இடங்களில் தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.   காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு எழுதி, வேலைக்கு தேர்வாகி உள்ளார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. தங்கசாமி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நேர்முக தேர்வு நடந்த சமயத்தில் சண்முகவேல் குடும்ப உறுப்பினர்களின் பேங்க் கையிருப்பு எவ்வளவு? அதற்கு முன்பாக பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நாகர்கோவில் கோட்டார் சமரச வீதியில் வசித்து வரும் ஸ்ரீஜித் என்பவர் 2009-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதியிருந்தார். இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதுபற்றி டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் கூறுகையில் “தற்போது ஸ்ரீஜித் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. உயர் அதிகாரிகள் கொடுக்கும் தகவலின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.  

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆற்காடு ஆகிய இடங்களில் உள்ள டாக்டர்கள், வருவாய் துறையினர் வீடுகளில் சோதனை நடந்தது. திருப்பத்தூர் அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் பிரதாப் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதேபோல் ஆற்காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் டாக்டர் பத்மா என்பவரது வீட்டிலும் நபீசாநகரில் டாக்டர் சுதா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்காண்ட பள்ளியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் விஜயலட்சுமி. இவரது வீடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளது. இவரது வீட்டிலும் இன்று 3 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினார்கள்.  

மதுரை மாவட்டத்தில் இன்று குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மதுரை டி.எஸ்.பி. கலாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை எஸ்.ஆலங்குளம், கூடல்புதூர், நாராயணபுரம், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்பட 13 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

 

Friday 13 January 2012

TNPSC ஊழல்: 73 இடங்களில் சோதனை





 21 மாவட்டங்களில் 73 இடங்களில் சோதனை


   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. பல் டாக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

       இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது முறைகேடுக்கான ஆவணங்கள், கட்டுகட்டாக பணம், ஹால்டிக்கெட்டுகள், பரிசு பொருள்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் போன்றவை சிக்கின. அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

  2-வது கட்டமாக அரசு பணியாளர்கள் தேர்வாணைய அலுவலகத்திலும், அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 
 இந்த கம்ப்யூட்டர்களை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டுபிடித்தனர்.  முக்கிய தகவல்கள் அடங்கிய கம்ப்யூட்டர் சர்வர் கைப்பற்றப்பட்டது.இதன் மூலம் யார்-யார்? தொடர்பு கொண்டு இருக்கிறார்கள், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

   இதில் பணியாளர்கள் நியமனத்தில் இடைத்தரகர்களாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள் செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3-வது கட்டமாக இடைத்தரகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். 

4-வது கட்டமாக இன்று தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெற்று தேர்வு எழுதியவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இவர்கள் மீது தேர்வுகளில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 21 மாவட்டங் களில் 73 இடங்களில் தேர்வு எழுதியவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அதிகாலையில் அதிகாரிகள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு குழுக்களாக சென்று ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொண்டனர்.  

சென்னையில் 10 இடங்களில் சோதனை நடந்தது. வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் டி.எஸ்.பி. சரசுவதி தலைமையில் சோதனை நடந்தது.

மதுரையில் 13 இடங்களிலும், காஞ்சீபுரத்தில் 3 இடங்களிலும், தஞ்சை- புதுக்கோட்டையில் தலா 5 இடங்களிலும், சேலம், வேலூர், சிவகங்கையில் 4 இடங்களிலும், திருச்சி, தேனி, தர்மபுரி, ஈரோடு நகரங்களில் 3 இடங்களிலும் சோதனை நடந்தது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் தொடர் சோதனை தேர்வாணைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசடியாக தேர்வு எழுதி பணி நியமனம் செய்யப் பட்டவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடாமல் ரகசியமாக வைத்து அடுத்தடுத்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பெரிய அளவில் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.   அதே நேரம் நேர்மையான முறையில் தேர்வெழுதும் மாணவர்கள் இனி நல்லதொரு எதிர்காலம் உள்ளதாக நினைக்கின்றனர்.

ஏற்கனவே நடந்த சோதனையின் அடிப்படையில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அதிகாரப் பூர்வமாக வெளியிடுவதற்கு முன் அவர்களை நேரில் சந்தித்தும், தவறான வழியிலும் லஞ்சம் பெற முயற்சி செய்தது, மோட்டார் வாகன ஆய்வாளர் காலி பணியிடங்களில் தகுதியற்ற பணியாளர்களை தேர்வு செய்ததன் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது,
 லஞ்ச ஊழல் முறைகேடுகளை தடுக்க முயன்ற தேர்வாணைய அலுவலரான ஐ.ஏ.எஸ். அதிகாரியை செயல்படவிடாமல் தடுத்தல், விசாரணைக்காக ஆவணங்களை தர மறுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை குறித்த தொலைகாட்சி செய்திகளைக் காண :http://www.youtube.com/watch?v=v9PHxPKCc5M&feature=related







Thursday 12 January 2012

குரூப்-1: DSP-க்கள் பணி நியமனம்

குரூப்-1 தேர்ச்சி : DSP-க்கள் பணி நியமனம் 
       TNPSC குரூப் -1 தொகுதியில் அடங்கிய DSP பணிக்கு கடந்த  2011 -ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் முதன்மை எழுத்துத் தேர்வும், ஜூன் மாதம் நேர்முகத்தேர்வும் நடைபெற்றது . அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனமும் பயிற்சியும் வழங்குவது தொடர்பான கோப்பு நவம்பர் 2011 -ல் மாண்புமிகு முதல்வருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தது. தற்போது முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு பணி நியமன ஆணையும், பயிற்சி தொடக்கம் குறித்த அறிவிப்பும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2012   ஜனவரி. 13  முதல் DSP பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையை அடுத்த வண்டலூரில் பயிற்சி ஆரம்பமாகிறது. 

        எனினும் DEPUTY COLLECTOR பதவிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பான கோப்பு இன்னமும் முதல்வரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. விரைவில் அக்கோப்பும் முதல்வரின் ஒப்புதலைப் பெறும் என்று தெரிகிறது.




    

 

Tuesday 10 January 2012

DIET-ல் விரிவுரையாளர் பணி

    ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் பணி
 தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 34 சீனியர் விரிவுரையாளர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இப்போட்டிதேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
        போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50.
   தேர்வுக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250.
          தேர்வு கட்டணத்தை டி.டி.யாக ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற முகவரிக்கு பாரத ஸ்டேட் பாங்க், இந்தியன், ஐ.ஒ.பி, கார்ப்பரேஷன், கனரா வங்கிகளில் மட்டுமே எடுக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.