Sunday 26 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

         சென்னை, ஆக., 25 : தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 6 லட்சத்து 76 ஆயிரத்து 700 பேர் எழுதினார்கள்.
 
          இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp என்ற இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2,88,588 லட்சம் பேர் எழுதினர். இரண்டாம் தாளை பட்டதாரி ஆசிரியர்கள் 3,88,175 லட்சம் பேரும் எழுதினார்கள். இதில் 1, 735 பேர் முதல் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,   713 பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும். இரண்டு தாள்களையும் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர். இதில் ஆண்கள் 768 பேர், பெண்கள் 1,680 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும் மட்டுமே என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

            உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா முதல் தாளில் 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புலம் பி.சித்ரா இரண்டாம் தாள் கணிதம் - அறிவியல் பாடத்தில் 142 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். சமூக அறிவியல் பாடத்தில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
           மீண்டும் TET : இத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதால் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 3-ம் தேதி வெற்றி பெறாதவர்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் இந்த தேர்வினை எழுத முடியும். தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்படும். புதியதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.
      மதிப்பெண்ணில் 60% மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும் என்றும், அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்விற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment