ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை இடைநிலை ஆசிரியர் பயிற்சி
முடித்தவர்கள் 2,88,588 லட்சம் பேர் எழுதினர். இரண்டாம் தாளை பட்டதாரி ஆசிரியர்கள்
3,88,175 லட்சம் பேரும் எழுதினார்கள். இதில் 1, 735 பேர் முதல் தாளில் தேர்ச்சி
பெற்றுள்ளதாகவும், 713 பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி
பெற்றுள்ளதாகவும். இரண்டு தாள்களையும் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர். இதில்
ஆண்கள் 768 பேர், பெண்கள் 1,680 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும்
மட்டுமே என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா முதல் தாளில் 122 மதிப்பெண் பெற்று முதல்
இடத்தையும், நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புலம் பி.சித்ரா இரண்டாம் தாள்
கணிதம் - அறிவியல் பாடத்தில் 142 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். சமூக
அறிவியல் பாடத்தில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் எடுத்து முதலிடம்
பிடித்துள்ளார்.
மீண்டும் TET : இத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதால் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களுக்கு
மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 3-ம் தேதி
வெற்றி பெறாதவர்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை
எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள்
மட்டும் இந்த தேர்வினை எழுத முடியும். தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால்
டிக்கெட் அனுப்படும். புதியதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.
மதிப்பெண்ணில் 60% மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி
பெற்றவர்களாகவும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு விரைவில்
கடிதம் அனுப்பப்படும் என்றும், அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்விற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment