Monday 10 December 2012

ஆன்-லைன் கலந்தாய்வு

6,592 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்


       ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் 6,592 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது பணியிடங்களை ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்தனர். இவர்கள் அனைவரும் அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே பணியிடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

     தங்களது மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாதவர்கள், வேறு மாவட்டங்களில் பணியாற்ற விரும்புபவர்கள் என மொத்தம் 2,035 பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை காலை ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறுகிறது. பணியிடங்களைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

     மாநிலம் முழுவதும் 32 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கலந்தாய்வு தொடங்கியது. தருமபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.

     சென்னையில் சாலை மறியல்: சென்னை மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் 168 பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வந்தனர். சென்னை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை. அதனால், கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களிடம், திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை காத்திருந்த பின்னரே அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸôர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

     கவலைப்பட வேண்டாம்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கணிதப் பாடத்தைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பாடங்களிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, சென்னையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் சென்னைக்கு அருகிலேயே பணியிடங்களைத் தேர்வு செய்யலாம். யாரும் கவலைப்பட வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கணிதப் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில்தான் காலிப்பணியிடங்கள் உள்ளதாகத் தெரிகிறது.

   இன்றும் வரலாம்: தவிர்க்க இயலாத காரணங்களால் ஆன்-லைன் கலந்தாய்வில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க முடியாதவர்கள், திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Sunday 26 August 2012

TET தேர்வில் "மைனஸ்' மதிப்பெண்

        டி.இ.டி., தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.
                                                                                                                                                                    டி.இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

         சென்னை, ஆக., 25 : தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 6 லட்சத்து 76 ஆயிரத்து 700 பேர் எழுதினார்கள்.
 
          இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp என்ற இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2,88,588 லட்சம் பேர் எழுதினர். இரண்டாம் தாளை பட்டதாரி ஆசிரியர்கள் 3,88,175 லட்சம் பேரும் எழுதினார்கள். இதில் 1, 735 பேர் முதல் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,   713 பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும். இரண்டு தாள்களையும் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர். இதில் ஆண்கள் 768 பேர், பெண்கள் 1,680 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும் மட்டுமே என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

            உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா முதல் தாளில் 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புலம் பி.சித்ரா இரண்டாம் தாள் கணிதம் - அறிவியல் பாடத்தில் 142 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். சமூக அறிவியல் பாடத்தில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
           மீண்டும் TET : இத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதால் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 3-ம் தேதி வெற்றி பெறாதவர்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் இந்த தேர்வினை எழுத முடியும். தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்படும். புதியதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.
      மதிப்பெண்ணில் 60% மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும் என்றும், அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்விற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Saturday 25 August 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு உணர்த்தும் உண்மைகள்



     அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையின் மூலம் சில கற்பிதங்களையும், சில உண்மைகளையும், எதிர்காலத்தில் இத்தேர்வில் செய்யவேண்டிய மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இரண்டாயிரம் பேரைத் தவிர, தேர்ச்சி பெற முடியாமல்போன அனைவருமே "தகுதியற்றவர்கள்' என நாம் ஒட்டுமொத்தமாகக் கருதிவிட முடியாது.  முதலில், தேர்வு அறிவிக்கப்பட்ட நாளுக்கும் தேர்வு நடைபெற்ற நாளுக்கும் இடையில் போதிய கால அவகாசம் இல்லை. பெரும்பாலானோர் இந்தத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தனர்.  தகுதித் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அளவிற்கேற்ப அதற்குத் தயார்படுத்திக் கொள்வதற்கு அவகாசம் இல்லை.  முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஒரே காலகட்டத்தில் போட்டித் தேர்வையும், தகுதித் தேர்வையும் (டிஇடி) எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  இரண்டிற்குமான கால அவகாசம் பெரும்பாலானோர் கேட்டுக் கொண்ட பின்னரே (அதுவும் போட்டித்தேர்வு முடிந்த பிறகு) சற்று நீட்டிக்கப்பட்டாலும் அது போதாது என்பதே பலரது கருத்து.  இரண்டிற்குமான தேர்வு பாடத்திட்டம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.  அதனால் இரு தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலையில் இருந்தவர்கள் எந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்று முடிவெடுப்பதே பெரும் சவாலாக இருந்தது.  

          சமூகப்பொறுப்பு சார்ந்த ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பா, தேர்வு முறையா என்பதில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் ஒவ்வொரு முடிவு எடுக்கப்பட்டு வருவதால், தேர்வுக்குத் தயாரான மன நிலையில் பெரும்பாலோர் இல்லை. பலர் பல்வேறு பயிற்சி நிறுவனங்களை நம்பி ஏமாந்தனர்.  கடந்த காலங்களில் ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு அவை எந்த அளவுக்குத் தரமான கல்வியைத் தந்தன எனக் கண்காணிக்காமல் விட்டதன் நிலைதான் தகுதித் தேர்வு என்ற ஒரு தேர்வை நடத்த வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.  பல தேர்வுக் கூடங்களில் தேர்வு நேரம் தொடங்கிய பிறகு நேர மேலாண்மையைப் பாதிக்கும் வகையில் தேர்வர்களிடம் கையொப்பம் வாங்குவது, தேர்வர்களின் சிந்தனையைத் திசை திருப்பும் வகையில் தேர்வு நேரம் தொடங்கிய சில நிமிடங்களுக்கும் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவும் தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது போன்ற நிகழ்வுகளும் நடந்ததால் சில வினாக்களைத் தவற விட்டோம் என்றும் சிலர் தெரிவித்தனர்.  தேர்வுக்கான வினாக்கள் பெரும்பாலும் பாடங்களின் ஆழமான நிலைக்குச் சென்று அதிலிருந்து கேட்கப்பட்டிருந்தன. ஆனால், ஆசிரியர் தேர்வாணைய அதிகாரிகள் பங்கேற்ற ஒரு டி.வி. நிகழ்ச்சியில், "ஆசிரியராக வரக்கூடிய ஒருவருக்கு அடிப்படையாக சில தகுதிகள் இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் வகையிலேயே மேலோட்டமாக, சாதாரணமாகத்தான் வினாக்கள் இருக்கும். பெரிதாகப் பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை' என்று கூறினார்கள்.  ஆசிரியருக்கான தகுதியைச் சோதிக்கும் வகையிலான தேர்வில் வினாக்களும் அவர்கள் தகுதியைச் சோதிக்கும் வகையில் பொதுப்படையாக அமைக்கப்பட வேண்டும்.  அதன் மூலம் அவர் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவார், எப்படிப் பாடங்களைக் கற்பிப்பார், என்ன மாதிரியான உளவியலைப் பயன்படுத்துவார், எப்படிப்பட்ட பண்பு நலன்கள் ஆசிரியரிடம் இருக்க வேண்டும் என்பன போன்றவற்றை அறிகின்ற வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டால்தான், அதைத் தகுதித் தேர்வு என அழைக்க முடியும்.  மாறாக போட்டித் தேர்வுகளுக்குக் கேட்கப்படுவது போன்றே ஒரு பாடத்தைப் படித்து நினைவில் நிறுத்தி, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதிலளிப்பது போன்றே அமையுமானால் அதைப் போட்டித்தேர்வு என்றே அழைத்து விடலாம்.  ஆசிரியர் பணிக்கான படிப்புகளை சில ஆண்டுகளுக்கு முன்னரே படித்து முடித்துவிட்டு, பணி கிடைக்கும் வரை வேறு வேலைகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும், பாடங்களுடன் சற்று தொடர்பு விடுபட்டிருக்கும் நிலையிலும் உள்ளவர்களுக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு தேர்வுக்கான போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது.  கல்வியியல் கல்லூரிகளில் பள்ளிகளில் உள்ள பாடங்கள் சொல்லித் தரப்படுவதில்லை. கற்பித்தல் முறைகள், உளவியல் முறைகள், மாணவர்களைக் கையாளும் முறைகள், ஆசிரியருக்கான தகுதிகள் போன்ற வகையிலான பாடத் திட்டங்களே அமைக்கப்பட்டுள்ளன.  ஆகையால் தகுதித்தேர்வுக்கான வினாக்களும் ஆசிரியரின் பண்பு நலன்களை, தகுதியை வெளிக் கொண்டுவரும் வகையிலும், கூடவே பாடம் சார்ந்த வினாக்களும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் விரிவாக விடையளிக்கும் அமைப்பில்கூட வினாக்களை அமைக்கலாம்.

Saturday 11 August 2012

செவ்வாய் கிரகத்தில் "ரோவர்' விண்கலம்

     வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆராய, சில விண்கலங்கள் அனுப்பப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, சில தடயங்கள் கிடைத்தன.

"கியூரியாசிட்டி': இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரித்து, செவ்வாய் கிரகத்தில் நேற்று தரையிறங்கியது. "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில், நேற்று காலை, இறக்கி விடப்பட்டது. "பாராசூட்' மூலம் மெதுவாக, செவ்வாயின் புவி பரப்பைத் தொட்ட, "கியூரியாசிட்டி', தரையிறங்கியதற்கு ஆதாரமாக, சில படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

மகிழ்ச்சி: ரோவர் விண்கலம் தொடர்பாக, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த "நாசா' விஞ்ஞானிகள், "கியூரியாசிட்டி' செவ்வாயில் இறங்கியதும், கட்டுப்பாட்டறையில் இருந்தபடி, ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

96 மைல் பரப்பளவு: ஆறு சக்கரங்களுடன் கூடிய, "கியூரியாசிட்டி' "ரோபோ' வாகனத்தில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை ஆராயக்கூடிய வசதி உள்ளது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்ட பின், ஒரு மாதம் கழித்து, "கேலே' பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ள "கியூரியாசிட்டி' ஆய்வுகளை துவங்கும். செவ்வாய் கிரகத்தில் 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து, "கியூரியாசிட்டி' ஆய்வுகளைச் செய்யும். புளூடோனியம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பேட்டரி, இந்த ரோபோவில் உள்ளது. "கியூரியாசிட்டி'யுடன் இணைக்கப்பட்டுள்ள ஆன்டெனா, ஸ்கேனர் கருவிகள், ஒரு வாரத்துக்கு பிறகு செயல்பாட்டுக்கு வர உள்ளன.

நேரடி ஒளிபரப்பு: ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்ச்சி, நியூயார்க்கின், "டைம்ஸ்' சதுக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ""ஓரிரு நாட்களில் "ரோவர்' விண்கலத்திலிருந்து துல்லியமான படங்கள் கிடைக்கும்,'' என, "நாசா' மைய தலைமை இன்ஜினியர் ராபர்ட் மேனிங் தெரிவித்துள்ளார்.

அமிதாப் கோஷ்: ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர் அமிதாப் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNTET தேர்வில் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி!

       ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.

         ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர்.  ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர்.  இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

  5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: 
          விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.  தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday 1 May 2012

TNPSC ஜாக்பாட் :

 GROUP-IV ல் 10718 பணியிடங்கள் : அறிவிக்கை வெளியீடு 
      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 28 , 2012 . கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/14_2012_not_tam_grp_iv_new1.pdf

Tuesday 10 April 2012

TET Question & Answer



ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: வினா - விடை!

இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டயமாக்கி தமிழக ஆசிரியர்களின் தரத்தினை உயர்த்த தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
TET அறிவிப்பு: ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.* ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது. * ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.*   ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET)  பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.*  கணினி ஆசிரியர்களுக்குஒன்று முதல் எட்டு வகுப்பு வரை குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் அமலில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு கணினி பாடம் கட்டாயமாக்கபடாததால் TET குறித்த அறிவிப்பு கணினி ஆசிரியர்களுக்கு TRB - யால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியர் நியமன வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அப்பொழுது இவர்களுக்கு TET கட்டயமாக்கபடும் என்பதாலும் இப்போதே இவர்கள் TET தேர்ச்சி பெற்று வைத்திருத்தல் நலம். இவர்கள் இப்பொழுது TET எழுத தடையேதுமில்லை.இவர்கள் விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டியவை.
 பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள். கணினியில் பி.எட் முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதுதல் நல்லது.    
1. Child Development and Pedagogy          -     30 மதிப்பெண்    
2. Tamil                                      -     30 மதிப்பெண்   3. English                                                  -     30 மதிப்பெண்   4. Maths and Science                                -    60 மதிப்பெண்* குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.*  6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.*  இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். *  இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.*  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.*  தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.*  இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.*   முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150    
1. Child Development and Pedagogy         -              30 மதிப்பெண்  
 2. Tamil or other language                         -              30 மதிப்பெண்  
 3. English                                                 -              30 மதிப்பெண்  
 4. Maths                                                  -              30 மதிப்பெண்  
 5. Environmental studies                           -              30 மதிப்பெண்
* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :   
1. Child Development and Pedagogy        -              30 மதிப்பெண்  
 2. Tamil or other language                       -              30 மதிப்பெண்  
 3. English                                                -              30 மதிப்பெண்    
4. Maths and Science                              -              60 மதிப்பெண் 
2. சமுக அறிவியல் ஆசிரியர் :    
1. Child Development and Pedagogy        -              30 மதிப்பெண்     
2. Tamil or other language                         -              30 மதிப்பெண்   
 3. English                                                 -              30 மதிப்பெண்    
4. Social Studies                                       -              60 மதிப்பெண் 
3. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :   
1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்   
2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்   
3. English                                                -              30 மதிப்பெண்   
4. Maths&Science அல்லது Social Studies  -     60 மதிப்பெண் 
 
* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies  என இரண்டும் எழுதவேண்டும்.
* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். 
TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.
* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்
.* இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.இ.டி) இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும். பி.எட். இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் இத்தேர்வில் பங்கு கொள்ளலாம்.
* தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
*   விண்ணப்பத்தின் விலை ரூ.50
.* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து  'ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். 
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 12 -ம் தேதி கடைசி நாள்.
*  8 +2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், எப்பகுதியில் வேண்டுமானாலும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து எந்த மாவட்டத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
* தாங்கள் தேர்வு எழுதும் மையம் அமைந்த மாவட்டத்தில்தான் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, மேலும் விண்ணப்பத்தை பெற்ற இடத்தில்தான் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
*   இதனால், ஆசிரியர்கள் தங்களுக்கு வசதியான இடத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தேர்வெழுத விரும்பும் தேர்வு மையத்தைக் குறிப்பிட்டு எந்த மாவட்டத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*  இதற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாக்களின் கடின அளவானது 12-ஆம் வகுப்பு வரை இருக்கும். 
 * இந்த தேர்வில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று தேர்விற்கான நேரம் 1 1/2 மணி நேரத்தில் 150 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே. * குறைந்த நேரத்தில் அதிக வினாக்களுக்கு விடையளிக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
*  புதியதாக தொடங்கவிருக்கும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்படி இருக்கும்? மாதிரி கேள்வித்தாள் இதுவரை பார்த்ததில்லையே என்று தவிக்கும் மாணவர்களுக்காகவே டி.இ.டி. தொடர்பான இந்தப் பகுதியில் . இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் வினாக்கள் - விடைகள் பாடவாரியாக தொடர்ந்து வெளியிடுகிறோம்.
இனி தாள்:1, தாள்:2 இரண்டிற்கும் சேர்ந்தே பாடவாரியான வினாக்கள்- விடைகளைப் பார்ப்போம்...
1. குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - Child Development and Pedagogy
1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)
3. கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.
4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
5. ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
7.முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
8.கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
12. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து
14. மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
15. ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
30. சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
40. 'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
41.உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
42. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
43. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
44. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
45. மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
46. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
47. ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.
48. பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை
49. அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
50. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
51. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
52. மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை
53. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.
54. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்
55. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா
56. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
57. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
58. உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
59. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
60. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
61. பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
62. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
63. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
64. உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை
65. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
66. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
67. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
68. உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.
69. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
70. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
71. வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
72. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்
73. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.
74. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
75. 'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
76. உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
77. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
78. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.
79. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
80. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
81. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
82. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
83. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
84. குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
85. குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
86. திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
87. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
88. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
89. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
90. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
91. ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
92. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
93. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
94. கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
95. ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
96. நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
97. ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.
98. எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
99. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
100. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
101. தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
102. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
103. உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
104. உற்று நோக்கலின் படி - நான்கு
105. லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
106. சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
107. சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
108. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
109. கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
110. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
111. மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
112. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
113. கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
114. அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
115.அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
116. மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் -  4-5 வயதுவரை
117. எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
118. எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
119. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
120. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
121. சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
122. உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
123 . உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
124. வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
125. பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
126. முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
127. மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
128. 'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
129. குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
130. தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
131. எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
132. வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.
133. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
134. பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
135  பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
136. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
137. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
138. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
139. கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
140. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
141. சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
142. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
143. தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
144. ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
145. காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் -  கட்டார்டு
146. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
147. சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
148. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
149. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
150. குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
151. ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
152. ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -   3 - 4 மாதங்கள்.
153. பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்
154. ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.
155. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
156. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
157. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
158. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
159. உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
160. உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
161. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
162. வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
163. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
164. கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
165. அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
166. நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
167. அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
168. கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
169. விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
170. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்
171. தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
172. ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
173. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
174. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
175. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
176. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
177. கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
178. எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
179. ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
180. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
181. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
182. உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
183. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
184. பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
185. குழந்தை வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்
186. குழந்தைகள் சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே
187. இயக்கம் - மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த நிலை
188. ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது
189. செயல்மையக் கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே
190. அறிவின் வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
191. வெள்ளைத்துணியில் துளி அளவு கருப்புமை நன்கு புலப்படுகிறது - இதில் கவனத் தொடர்பான காரணி - புதுமை
192. மீத்திறன் பெறஅறக் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 130 -க்கு மேல்
193. பெட்ரண்டு ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு -  Y=f(X,D,M)
194. தார்ண்டைக்கிள் கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.
195. குமரப்பருவப் பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி
196. தான் என்னும் உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு
197. அடைவு ஊக்கியின் அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு
198. மேம்பட்ட நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்
199. ஜான் டூயியினது கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி
200. குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு விதி - மூட்ட விதி
201. பொருட்களின் இயல்புகள், மனிதனது செயலியக்கம் ஆகியவற்றின் இடைவினையினால் புலன் காட்சியின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது என விளக்கியவர்கள் - பியாஜே மற்றும் புரூனர்
202. உட்காட்சி வழிக்கற்றலை விளக்க கோஹலர் பயன்படுத்தியது - குரங்கு
203. தார்ண்டைக்கின் பயிற்சி விதி அலைவெண் விதி எனவும் அழைக்கப்படுகிறது.
204. வாகனங்களுக்கு நான்கு முதல் ஆறு வரையிலான எண்கள் தரப்படுவதன் உளவியல் காரணி - கவன வீச்சு
205. வழிக்காட்டுதல் கோட்பாடுகளில் பொறுத்தமற்ற ஒன்று - பிறழ்வு நிலையுடையோருக்கு மட்டும் தேவைப்படுவது.
206. ஸ்பியர்மென் கருத்துப்படி நுண்ணறிவு உள்ளடக்கியசு - பொதுக்காரணி G மற்றும் செயலுக்குரிய ஒரு சிறப்புக் காரணி S.
207. தெற்றுதல், திக்குதல் போன்ற மொழிப்பேச்சு குறைபாடுகளை எவ்வாறு நீக்கலாம் - தொடர் பயிற்சி மூலமாகவும், மருத்துவ உதவி மூலமாகவும்.
208. நடமாடும் கேள்விக்குறிகள் என உளவியலறிஞர் குரிப்பிடுவது - பிள்ளைப்பருவத்தினர்.
209. A,B என்ற குழந்தைகளின் மன வயது, காலவயது முறையே 8,6 மற்றும் 6,8 எனில் அக்குவந்தைகளின் நுண்ணறிவு ஈவு தொடர்பான சரியான கருத்து -   A-யின் நுண்ணறிவு ஈவு B-யை விட அதிகம்
210. உளவியலறிஞர்கள் நுண்ணறிவு வளர்ச்சி முழுமைப் பெற்று விடுகிறது எனக்குறிப்பிடும் அதிகபட்ச வயது - 16
211. வளர்ச்சிப் பருவத்தில் தோன்றும் அறிதிறன் செய்பாட்டுக் குறைபாடு காரணமாக நடத்தையில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் - மனவளர்ச்சி குன்றியோர்
212. ஆளுமையை அளவிடும் முறைகள் - வினா வரிசை முறை, தர அளவுகோல் முறை, புறத்தேற்று நுண்முறை
213. கிராமத்திலிருந்து குடும்பத்தைப் பிரிந்து நகரத்திற்கு கல்வி பயில செல்லும் மாணவனுக்கு ஏற்படுவது - மனப்போராட்டம்
214.குறிப்பிட்ட மனவெழுச்சி இயல்பான தொடர்புடைய பொருளிலிருந்து விலகி, முற்றிலும் தொடர்பில்லாத வேறொரு பொருளின் பால் செலுத்தப்படுதலைக் குறிப்பது - இடமாற்றம்
215. தொடக்கக் கல்வி நிலையில் மாணவர்களைக் குழுக்ளாகப் பிரிக்க பயன்படும் அளவுக்கோல் - செய்வினைத்திறன்கள், நுண்ணறிவு, சிறப்பு நாட்டங்கள்
216. மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு வளர்ச்சி எந்த வயதில் நின்று போகக்கூடும் - 10 - 12 வயதில்
217. குழந்தை, ஒரு பொருளைப் பற்றி மன பிம்பங்கலைப் பயன்படுத்தி சிந்திக்கும் நிலை - உருவக நிலை
218. குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணி -  உடல் நலக்குறைவு, நுண்ணறிவு, இரு மொழி வுழங்கும் குடும்பம்.
219. ஒரு தூண்டலை வழங்குவதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால். அத்தூண்டல் - வலுவேற்றி
220. நடத்தை மாற்றக் கோட்பாடு அடிப்படையில் கற்றலுக்கு மூன்று வெளிக்கட்டுப்பாடுகள் அவசியம் எனக்கூறியவர் - ஸ்கின்னர்.
221. பாவ்லாவின் கற்றல் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டது - நாய்
222. சிரித்தல், ஒலிகளை எழுப்புதல், சைகைகள் மூலம் சிறு குழந்தைகள் தங்கள் தேவைகளை பிறருக்கு தெரிவிக்க முற்படுவது - பேச்சுக்கு முந்தையநிலை
223. கற்றலின் இயல்பு சாராத கருத்து - கற்றல் சிறப்பு பொருந்திய உயிரிகளிடம் மட்டுமே காணப்படும்.

                     



WHO IS WHO IN PSYCHOLOGY
1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
31. அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
32. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்
34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)
35. பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
36. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
37. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
41. மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
42. பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
43. தனி நபர் உளவியல் - ஆட்லர்
44. உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்
46. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
48. வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
54. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
55. படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
56. அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
57. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
58.மறத்தல் சோதனை - எபிங்காஸ்
59. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
60. பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
61. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
62. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
63. குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
64. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
65. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
66. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
67. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்


                                                         



Monday 19 March 2012

VAO :மாவட்ட வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு


       கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் காலியாக இருந்த வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பொதுப் பிரிவில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 384 இடங்களுக்கு தேர்வு நடந்தது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான ஆயிரத்து 77 குறைவு காலிப் பணியிடங்களும் அடக்கம். 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியாகின.  தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியிடங்களை ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 18-ம் தேதி வரையிலும், செப்டம்பர் 26 முதல் 30 வரையிலும் நடைபெற்றன. 
 
 இணையதளத்தில் வெளியீடு: இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெயரும், வி.ஏ.ஓ.க்களின் தேர்வெண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.  மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒவ்வொரு கோட்டம் வாரியாக வி.ஏ.ஓ.க்களை பிரித்து அளிப்பார். இறுதி உத்தரவுகளை கோட்டாட்சியர்கள் பிறப்பிப்பார்கள்.  அவர்களிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்ற வி.ஏ.ஓ.க்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி அடுத்த வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.

Thursday 15 March 2012

TET தேர்வு: TRB விளக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: பி.லிட். படித்தவர்கள் எந்தத் தாளை எழுதலாம்? தேர்வு வாரியம் விளக்கம்

        ஆசிரியர் தகுதித் தேர்வில் பி.லிட். தமிழ்ப் பட்டதாரிகள் எந்தத் தாளை எழுதுவது என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் தாளும், பிற்பகல் இரண்டாம் தாளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதலாம்.  பி.லிட். மற்றும் பி.எட். படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பி.லிட். படிப்போடு டிப்ளமோ படித்தவர்கள், புலவர் பயிற்சி முடித்தவர்கள் எந்தத் தாளை எழுத வேண்டும் என்பது தொடர்பாக பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர்.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:  பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு ஆசிரியர் டிப்ளமோ பட்டத்தையும், அதன் பிறகு பி.லிட். பட்டமும் பெற்றவர்கள் முதல் தாளையும், இரண்டாம் தாளையும் எழுதலாம்.  பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பி.லிட். பட்டமும், புலவர் பயிற்சியும் முடித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம்.  இணையதளத்தில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் எளிய வினா, விடை அமைப்பிலான தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இவை வெளியிடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday 13 March 2012

VAO பணி:ஓரிரு நாள்களில் உத்தரவு

வி.ஏ.ஓ.க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு: ஓரிரு நாள்களில் உத்தரவுகளை அளிக்க நடவடிக்கை

  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.  அதற்கான உத்தரவுகள் ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகம் முழுவதும் காலியாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பொதுப்பிரிவில் காலியாக இருந்த 2 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் ஆயிரத்து 77 இடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க 10 லட்சத்து 44 ஆயிரத்து 119 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில், 85 ஆயிரத்து 384 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.  முடிவுகள் வெளியீடு: பொதுப் பிரிவினருக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பரிலும் வெளியாகின. தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்தபோதும் வெற்றி பெற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படாமல் இருந்தன. 
 
    இந்த நிலையில், பணியிடங்களை ஒதுக்கும் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு அவர்களிடம் எந்த மாவட்டத்தில் பணிபுரிய விருப்பம் என்பதும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் மாவட்ட ஒதுக்கீட்டுக்காகக் காத்திருந்தனர்.  ஒவ்வொரு மாவட்டத்துக்கு எத்தனை வி.ஏ.ஓ.க்கள் தேவை என்பதும், அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்படும். அவர் ஒவ்வொரு கோட்டம் வாரியாக வி.ஏ.ஓ.க்களை பிரித்து அளிப்பார். இறுதி உத்தரவுகளை கோட்டாட்சியர்கள் பிறப்பிப்பர்.  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கான பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சில நாள்களில் அதற்கான உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 முதல்வர் வழங்குகிறார்: வி.ஏ.ஓ.க்களுக்கான உத்தரவுகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. 20 வி.ஏ.ஓ.க்களுக்கான உத்தரவுகளை அவர் வழங்குவார் எனத் தெரிகிறது.

Wednesday 7 March 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு - JULY 12-ல் நடக்கிறது

 TRB அறிவிப்பு.

     TNTET (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்ரல் 4 ஆம் தேதியாகும். TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும் நாள்: முதல் தாள்- JULY 12 -ஆம்  தேதி முற்பகல்,  இரண்டாம் தாள் - JULY 12   -ஆம்  தேதி பிற்பகல் நடைபெறும்.


 இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  
     ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். JULY 12-ம் தேதி காலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வும், பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.

முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150
                1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -             30 மதிப்பெண்
    4. Maths                                                    -            30 மதிப்பெண்
    5. Environmental studies                           -              30 மதிப்பெண்
இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -            30 மதிப்பெண்
    4. Maths and Science                                -            60 மதிப்பெண்
2. சமுக அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -            30 மதிப்பெண்
    4. Social Studies                                        -            60 மதிப்பெண்
2. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்
                3. English                                                 -             30 மதிப்பெண்
    4. Maths&Science அல்லது Social Studies  -      60 மதிப்பெண்
சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உரிய தகுதிகளுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக 2010, ஆகஸ்ட் 23 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் பணியில் சேர்ந்தவர்கள் இந்தத் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.  தனியார் பள்ளிகளில் உரிய தகுதி இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தகுதியைப் பெற்று இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியில் சேர விரும்புவோர் அனைவரும் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.  

தேர்வை எழுதுவதற்கான தகுதி
     பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பிறகு, அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயம் பெற்றவர்கள் (பார்வைத் திறன் இல்லாதவர்கள் தவிர) ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம்.  பி.ஏ., பி.எஸ்சி., பி.லிட்., இளநிலை படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் பாடங்களில் பட்டம் பெற்ற பிறகு ஆசிரியர் கல்வியில் இளநிலைப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் இரண்டாம் தாளை எழுத வேண்டும்.  ஆசிரியர் பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். 

150 மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 90 நிமிஷங்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் தாளிலும் அதேபோன்று 150 மதிப்பெண்ணுக்கு மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இடம்பெறும்.  இதற்கான பாடத்திட்டம் விண்ணப்பத்துடனான குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கும். இந்த இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.  தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற விரும்பும் அனைவரும் இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்தத் தேர்வு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியை மட்டுமே வழங்குகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியராகிவிட முடியாது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளில் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவர். 

66 கல்வி மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் உள்ள 66 கல்வி மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும். மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி மார்ச் 22 முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500 (தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணம் ரூ.250).  முதல் தாள் அல்லது இரண்டாம் தாள் அல்லது இரண்டு தாள்களையும் எழுதுவோர் ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது.  ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது


மேலும் விவரங்களுக்கு காண்க: www.trb.tn.nic.in/

Sunday 4 March 2012

16,000 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு

பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டன.
 
          தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அஞ்சல் வழியில் சனிக்கிழமை அனுப்பப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளன. தாற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Saturday 3 March 2012

TRB Coaching Centers List

TRB Coaching Centers in Tamilnadu
List of TRB exam coaching centres in Madurai, Kanchipuram, Vellore, Chennai, Villupuram, Dharmapuri and rest of Tamilnadu are  listed here.
1.Athiyaman coaching center, Dharmapuri.
   Mobile: 9489170900
2.VIDIYAL COACHING CENTER,
   @Voorhees Hr.Sec.School, Officers line,
   VELLORE. Mobile No.9092997509, 8220021681. 
   (Class: Saturday & Sunday)
3.Nalanda Kanchipuram Center:
Pachiyappan Higher Secondary School,
Near Mongil Mandabam,
Kanchipuram - 631501.
(Class: Saturday & Sunday)
Ph: 044 - 27238311
Nalanda Chennai Centre:Ramakrishna Mission Matriculation School,
(South),Barkit Road, Near T.Nagar bus stand,
Chennai - 600017.
(Class: Saturday & Sunday)
Mobile: 9443738311, 9943587919.
4.SRI SAI COACHING CENTER
(Sri Sai Educational Trust)
2/25,Raja Mill Road, (Near Mangayarkarasi Middle School)
Madurai – 625001,
Tamilnadu, INDIA.
Cell: 9363206725, 9791352522, 9750517739, 9842189492
5.Appolo Study Center
No: 25, Nandhi Loop Street,
West C.I.T.Nagar, Chennai-35.
(Near T.Nagar Bus Stand) Near Nandhi Statue
Phone   :   24339436, 42867555,
Mob      :  98400 99828, 9840226187
6.National Coaching Center.
   Villupuram. Mobile: 9842645387.