Sunday, 26 August 2012

TET தேர்வில் "மைனஸ்' மதிப்பெண்

        டி.இ.டி., தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.
                                                                                                                                                                    டி.இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment