பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டன.
தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதி நேர
ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அஞ்சல் வழியில் சனிக்கிழமை
அனுப்பப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் தலைமையிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளன.
தாற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு மாத ஊதியமாக
ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்
கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம்
செய்யப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தது
நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment