Thursday 23 February 2012

GROUP-II தேர்வு முடிவு:துறை ஒதுக்கீடு

 GROUP-II தேர்வு முடிவுகள் வெளியீடு: 1,384 பேர் தேர்வு

    சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி வழங்கியதை அடுத்து, குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற  1,384 பேரின் தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அந்தந்த துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

        நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில், உதவிப் பிரிவு அலுவலர் பணி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், வருவாய்த் துறையில் உதவியாளர், உதவி வணிகவரி அலுவலர் உட்பட, பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வை, 2010 ஏப்ரல் 11ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. எழுத்துத் தேர்வுக்குப் பின் நடந்த நேர்முகத் தேர்வில், 2,574 பேர் பங்கேற்றனர். இரு தேர்வுகளிலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. கடந்த 9ம் தேதி, தேர்வு முடிவை வெளியிட, ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து, தேர்வு செய்யப்பட்ட 1,384 பேரின் விவரங்களை, பல்வேறு துறைகளின் தலைவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அனுப்பியுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத, 240 பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், மார்ச் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, தேர்வாணையச் செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment