Saturday 11 February 2012

TRB - AEEO தேர்வெழுத 66,957 பேர் தகுதி

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி: தேர்வெழுத 66,957 பேர் தகுதி

         சென்னை, பிப்.10: தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத 66,957 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணைக் கொண்டு இந்தத் தேர்வுக்குத் தகுதியுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மொத்தம் 34 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு சுமார் 68,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. பரிசீலனையில் சுமார் 1,500 பேர் இந்தத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, 66,957 பேர் இந்தத் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெறாதவர்களுக்கு, அவர்கள் ஏன் தகுதி பெறவில்லை என்றும் காரணமும் கூறப்பட்டுள்ளது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எழுத்துத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தகுதியுள்ள அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட உள்ளது.

No comments:

Post a Comment