Wednesday 29 February 2012

TNPSC: 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

 மார்ச்- 31க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு: நட்ராஜ்

   தமிழக அரசில் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், இது விரைவில் நிரப்பப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.

   காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் டி.என்.பி.எஸ்.சி. தீவிரம் காட்டி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வுகளை 9 மாதத்திலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்வுகளை 6 மாதத்திலும், எழுத்துத் தேர்வுகளை மூன்று மாதத்திலும் நடத்தி முடிக்க காலக்குறீயிடு நிர்ணயித்துள்ளோம்.  தமிழக அரசில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு மார்ச் 31-க்குள் வெளியிடப்படும். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. நல்லவர்கள் அரசுத் துறைக்கு அதிகமாக வர வேண்டும். அப்போதுதான் அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேறும்.  கால்நடைச் செல்வங்களை பாதுகாப்பது நமது கடமையாகும். நான் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது குதிரைப் படையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தேன். நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், 2 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே படிப்பை முடித்து வருகின்றனர். இதனால் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் ஆர். நடராஜ்.

No comments:

Post a Comment