"வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி
அருகே, கீழ்வாணியில் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், கோபி கீழ்வாணி என்ற
கிராமத்திற்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், 614 பயனாளிகளுக்கு, 32 லட்சம்
மதிப்பிலான விலையில்லாப் பொருட்கள் வழங்கி பேசியதாவது:
வருவாய்த்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்து
வருகின்றன. வி.ஏ.ஓ., பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. ஒரு
கிராமத்தில் பணியமர்த்தப்பட்ட வி.ஏ.ஓ., மூன்று, நான்கு கிராமத்தை கவனித்து
வருகின்றனர். இதனால், பணிச்சுமை அதிகரிக்கிறது. சட்டசபை கூட்டம்
முடிந்தபின், தமிழக முதல்வர் உத்தரவுடன், துறை அதிகாரிகளை கலந்தாய்வு
செய்து, வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அரசு உரிய
நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
No comments:
Post a Comment