அறுவடைக்காலம்......
விதை விதைத்தவன்
காத்திருந்தான்..
போட்ட விதை
திருடப்பட்டதே
தெரியாமல் ..
ஜீவ ராசிகள்
தின்றிருந்தால் கூட
பரவாயில்லை.
திருடப்பட்டதைத்தான்
அவனால்
ஜீரணிக்க முடியவில்லை .
ஆனாலும்
அசரவில்லை அவன்
விதை நேர்த்தி தொடர்கிறது.
அவனுக்கு தெரியும்
இது.. வசந்த காலத்தின்
தொடக்கம்.
வினை விதைத்தவன்...
காத்திருக்கிறான்
புழலா? வேலூரா?
என தெரியாமல்..
கைப்பொருளை
களவாடினால்தான்
தண்டனையா?
இங்கே கனவுகளை
களவாடினாலும்
தண்டனைதான் .
இவனுக்கும் தெரியும்
இது இலையுதிர்காலத்தின்
தொடக்கம் .
மொத்தத்தில்
இது அறுவடைக்காலம்..
வினை விதைத்தவனுக்கு
(புதிய)
அறிவிப்புகளுக்காக
காத்திருக்கும்
அனைவருக்கும்
அறுவடைத் திருநாள்
நல்வாழ்த்துகள் ....
- Rainthriller
superb kavithai
ReplyDelete