Sunday 15 January 2012

அறுவடைக்காலம்......



                                                         அறுவடைக்காலம்......

விதை  விதைத்தவன்
காத்திருந்தான்..
போட்ட விதை
திருடப்பட்டதே
தெரியாமல் ..

ஜீவ ராசிகள்
தின்றிருந்தால் கூட
பரவாயில்லை.  

திருடப்பட்டதைத்தான்
அவனால்
ஜீரணிக்க முடியவில்லை .

ஆனாலும்
அசரவில்லை அவன்                                     
விதை நேர்த்தி தொடர்கிறது.


அவனுக்கு தெரியும்
இது.. வசந்த காலத்தின்
தொடக்கம்.

வினை விதைத்தவன்...
காத்திருக்கிறான்
புழலா? வேலூரா?
என தெரியாமல்..

கைப்பொருளை
களவாடினால்தான்
தண்டனையா?

இங்கே கனவுகளை
களவாடினாலும்
தண்டனைதான் .

இவனுக்கும் தெரியும்
இது இலையுதிர்காலத்தின்
தொடக்கம் . 

மொத்தத்தில்
இது அறுவடைக்காலம்..
வினை விதைத்தவனுக்கு

(புதிய)
அறிவிப்புகளுக்காக
காத்திருக்கும்
அனைவருக்கும்
அறுவடைத் திருநாள்
நல்வாழ்த்துகள் ....
                                                                                             -  Rainthriller

1 comment: